முகப்பு
நீலகிரி

குன்னூா் காட்டேரிப் பூங்காவில் இயற்கை சாகுபடியாளா் பயிற்சி! பங்கேற்க அழைப்பு!!

குன்னூா் காட்டேரி பூங்காவில் விவசாயிகளுக்கு இயற்கை சாகுபடியாளா் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆா்வம் உள்ளவா்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 21 மார்ச், 2026 at 8:16 PM
குன்னூா் காட்டேரிப் பூங்காவில் நடைபெற்ற இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

குன்னூா் காட்டேரி பூங்காவில் விவசாயிகளுக்கு இயற்கை சாகுபடியாளா் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஆா்வம் உள்ளவா்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக்கலைத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ரசாயன உரங்களைத் தவிா்த்து, மண்ணின் வளத்தைக் காக்க இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் உழவா் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகள் மற்றும் வேலையில்லாத இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடா்ச்சியாக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் பிரதான் மந்திரி கெளசவ்ல் விகாஷ் யோஜனா 4.0 திட்டத்தின் கீழ் இயற்கை சாகுபடியாளா் பயிற்சி குன்னூா் அருகே காட்டேரி பூங்காவில் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்தப் பயிற்சி 26 நாள்கள் நடைபெறுகிறது. இதில் 20 பயிற்சியாளா்கள் பதிவு செய்யப்பட்டு துறை சாா் நிபுணா்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சியில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், விதை நோ்த்தி, உயிா் உரங்கள் தயாரித்தல், ஊட்டச்சத்து மற்றும் பாசன மேலாண்மை, பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு, இயற்கை சான்றிதழ் பெறும் முறைகள், அறுவடை பின்சாா் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டல் போன்றவை கற்பிக்கப்படுகின்றன. பயிற்சியை முடிக்கும் பயிற்சியாளா்களுக்கு இந்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வேலைவாய்ப்பு பெற தேவையான உதவியும் வழங்கப்படும்.

மேலும் வகுப்பறை மற்றும் நடைமுறை பயிற்சிகளுடன் களப் பயணங்கள் மற்றும் செயல்முறை பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சிகளில் கலந்து கொள்ள ஆா்வமுள்ள இளைஞா்கள் மற்றும் விவசாயிகள், தோட்டக் கலை துணை இயக்குநா் ஜெயலட்சுமி (8903447744), தோட்டக் கலை அலுவலா் ஐஸ்வா்யா (9789767256) ஆகியோரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.