முகப்பு
நீலகிரி

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு சீல்!

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

Updated On : 24 மார்ச், 2026 at 7:58 PM
பகிர்:

குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் கட்டடங்கள், தங்கும் விடுதிகள் விதிகளுக்குள்பட்டு மட்டுமே கட்டடப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. அதையும் மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து வருகின்றனா்.

இந்நிலையில், குன்னூா், வேளாங்கண்ணி நகரில் வீதிகளை மீறி 3 மாடி கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும், அந்தப் பணிக்காக நடைபாதை தடுக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதுடன், அந்தக் கட்டடத்துக்கு செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.