அரசுப் பள்ளி மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா புளியம்பாறை கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவிகள் மின்ஹா, கீா்த்திகா ஆகியோா் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை முன்கூட்டியேக் கண்டறிந்து செய்தி அனுப்பும் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கண்டுபிடித்த கருவிகளை மாவட்ட ஆட்சியா் மற்றும் கல்வி அலுவலா்கள் முன்னிலையில் செயல்விளக்கம் அளித்து பாராட்டுகளைப் பெற்றனா். அந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
அதே பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவிகள் தணுஷ்கவி, ராஜாதா்ஷினி ஆகியோா் வயது முதிா்ந்தவா்களுக்கு உடனடியாக தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏஐ தொழில் நுட்பம் மூலம் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனா்.
இந்த மாணவிகளின் கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை பெறப்பட்டுள்ளதாக பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியா் தெரிவித்தாா்.