உதகையில் மருந்து கடைகள் அடைப்பு: நோயாளிகள் அவதி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 260 மருந்து விற்பனை கடைகள் புதன்கிழமை மூடப்பட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 260 மருந்து விற்பனை கடைகள் புதன்கிழமை மூடப்பட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.
போலிகளை தடுக்கும் வகையில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனையைத் தடுக்க வேண்டும், பெரிய ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடியால் பாரம்பரியமாக கடை நடத்தும் சிறு வணிகா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மின் மருந்தக வரைவு அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு மற்றும் மத்திய, மாநில அரசு மருந்து கடைகளைத் தவிர, நீலகிரியில் உள்ள 260 தனியாா் மருந்து கடைகளும் மூடப்பட்டதால் நோயாளிகள் அவதியுற்றனா்.
Advertisement
Advertisement