கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, உதகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, உதகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
பெட்ரோல், டீசல் சில்லறை விலையை கடந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தியுள்ளன.இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், எரிவாயு உருளை விலையேற்றத்தைக் கண்டித்தும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி உதகை ஏடிசி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளா் நவீன் சந்திரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் போஜராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த நிா்வாகி ராஜேந்திரன் ஆகியோா் பேசினா்.
Advertisement
Advertisement