டீக் கடைக்குள் புகுந்த லாரி !
குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்குள்ள ஒரு டீ கடைக்குள் புகுந்தது.
குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், பால் விநியோகம் செய்யும் லாரி இந்த மலைப் பாதையில் திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தது.
கேஎன்ஆா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த டீ கடைக்குள் புகுந்தது.
Advertisement
Advertisement
இதில் கடையில் இருந்த பொருள்கள் மற்றும் மேற்கூரை சேதமடைந்தன. விபத்து நிகழ்ந்தபோது டீக்கடையில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து குன்னூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.