திருப்பூர்

எலுமிச்சையில் சொறி நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

DIN

வெள்ளக்கோவில் பகுதியில் எலுமிச்சை பழங்களில் சொறி நோயின் தாக்குதல் அதிக அளவு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளக்கோவில் பகுதியில் அதிக அளவு எலுமிச்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. இம்மரங்களின் இலைகள், பழங்களில் புள்ளிகள் தோன்றுகின்றன. இந்தப் பாதிப்பு காரணமாக எலுமிச்சையின் விளைச்சல் குறைந்துள்ளதுடன், பழங்களை விற்கவும் முடிவதில்லை.
இதுகுறித்து வேளாண் அலுவலர் முருகேசன் கூறுகையில், "இந்தச் சொறி நோய் ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் காய்ந்த இலைகள், குச்சிகளைத் தீயிட்டு அழிக்க வேண்டும். காப்பர் ஆக்ஸி குளோரைடு, சூடோமோனாஸ் புளூரசன்ஸ், வேப்பம் புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றைத் தெளித்தால் இந்நோய் கட்டுப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT