திருப்பூர்

திருப்பூரில் 103ஆவது பிறந்த நாள்  கொண்டாடிய மூதாட்டி

DIN

திருப்பூரில் மூதாட்டி ஒருவர் தனது 103ஆவது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினார். 
  திருப்பூர், கல்லூரி சாலை, அணைப்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி ராமாத்தாள் (103). இத்தம்பதிக்கு நான்கு மகள்கள், மகன் உள்ளனர். அவர்கள் வழியில் 26 பேரன், பேத்திகளும், 10 கொள்ளு பேரன், பேத்திகளும், ஒரு எள்ளு பேத்தியும் உள்ளனர்.
   தற்போதும் ராமாத்தாள் ஆரோக்கியத்துடன் உள்ளார். இந்நிலையில்,  ராமாத்தாள் தனது 103ஆவது பிறந்த நாளைக் குடும்பத்தினருடன் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடினார். அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அவரது குடும்பத்தினர், அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு ராமாத்தாளிடம் ஆசி பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT