திருப்பூர்

வெள்ளக்கோவில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் இன்றுமுதல் 3 நாள்களுக்கு வேலை நிறுத்தம்

தினமணி

வெள்ளக்கோவில் பகுதி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இன்று தொடங்கி வியாழக்கிழமை வரை வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. ஜவுளித் துறைக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக வட்டார சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கப் பொருளாளர் ஏ.தேசிகன் கூறியதாவது:
 விசைத்தறித் தொழிலுக்கு 5 சதவீத சேவை வரி விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் கடந்த 70 ஆண்டுகளாக ஜவுளித் துறைக்கு எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை. சென்வாட் வரிக் காலகட்டத்தில் கூட இத்துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

தற்போதைய வரி விதிக்கும் முடிவால் விசைத்தறி தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படும். அதனால் இத்தொழிலில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே வரிவிதிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT