திருப்பூர்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

DIN

திருப்பூரில் கோயில் உண்டியலை உடைத்து திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், போயம்பாளையம், அவிநாசி வீதியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்துக்குள் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு கோயில் சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே புகுந்த மர்ம நபர்கள், கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் கோயிலில் இருந்த அம்மன் நகை உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT