திருப்பூர்

மழை வேண்டி சிறப்பு வழிபாடு

DIN

மழை வேண்டி அவிநாசி அருகே ராக்கியாபாளையம் சக்தி மாரியம்மன் கோயிலில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
இதையொட்டி, அப்பகுதியில் பெண்கள் வீடு, வீடாகச் சென்று மழைச் சோறு வாங்கி வந்தனர். பிறகு மாலை 3 மணிக்கு, விநாயகர் கோயிலிருந்து சக்தி மாரியமமன் கோயிலுக்கு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து வருண பகவானுக்கு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு தீர்த்த அபிஷேகம், திரவிய அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று மழை வேண்டி கூட்டுப் பிராத்தனை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT