திருப்பூர்

சாலை விபத்தில் இளைஞர் சாவு

DIN

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அவிநாசி,  மங்கலம் சாலை காசிகவுண்டன்புதூர்  பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் செந்தில்குமார் (38).  பந்தல் அமைக்கும் பணி செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இருசக்கர வாகனத்தில் மங்கலத்தில் இருந்து அவிநாசி நோக்கி செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தார்.  அவிநாசி உமையஞ்செட்டிபாளையம் பிரிவு அருகே வரும்போது,  அவிநாசியில் இருந்து மங்கலம் நோக்கி சென்ற கார்,  இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமார் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

SCROLL FOR NEXT