உடுமலையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
உடுமலை வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற உள்ளது.
உடுமலை வருவாய்க் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற உள்ளது.
இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் எஸ்.அசோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
உடுமலை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 20) காலை 11 மணி அளவில் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் உள்ள விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை எடுத்துக் கூறி தீர்வு காணலாம்.