வெள்ளக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகினைக் காக்கும் பொறுப்பினைப் பெற்ற தெய்வமாக அறியப்படும் பைரவர் வழிபாடு சிவாலயங்களில் ஒரு கட்டாய அங்கமாக உள்ளது.
பைரவரை வழிபட்டால் அஷ்டமச் சனி, ஜென்மச் சனி, ஏழரை நாட்டுச் சனியிலிருந்து விடுபட்டு சகல நலங்களையும் பெறலாம் என்கிற நம்பிக்கை உள்ளது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் ஈஸ்வரன் கோயிலில் பைரவருக்கு 64 விளக்குகள் ஏற்றி, மூலிகைத் திரவியங்கள், புஷ்பங்கள் படைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.