திருப்பூர்

வீடு புகுந்து திருடியவருக்கு கடுங்காவல் தண்டனை

DIN

அவிநாசி அருகே வீடு புகுந்து திருடியவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து  நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சாம்ராஜ் (40). இவர், அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் வைஷ்ணவி கார்டன் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது வீட்டிற்குள் புகுந்து 3 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். 
இவ்வழக்கு விசாரணை அவிநாசி குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிபிரபா தலைமையில் நடைபெற்றது வந்தது.
 இவ்வழக்கில், சாம்ராஜுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT