திருப்பூர்

குடிநீர்க் குழாய் உடைப்பால் சேதமடைந்த சாலை

DIN

வெள்ளக்கோவிலில் காவிரிக் குடிநீர்க் குழாய் உடைப்பால் தார் சாலை சேதமடைந்தது.
கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் வெள்ளக்கோவில் கல்லுக்குட்டை மேடு நீருந்து நிலையத்துக்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 
வெள்ளக்கோவில் பிரதான கடை வீதி நான்கு சாலைச் சந்திப்பு அருகில் தாராபுரம் சாலையில் குடிநீர்க் குழாய் அதிக அழுத்தம் காரணமாக உடைந்தது. இதில் தார் சாலை சேதமடைந்து சுமார் இரண்டடி பள்ளம் ஏற்பட்டது. 
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து நகராட்சி சார்பில் குடிநீர்க் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேதமடைந்த சாலை விரைவில் சீரமைக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT