திருப்பூர்

லாரி, கார் நேருக்கு நேர் மோதல் : மூதாட்டி உள்பட 2 பேர் சாவு

DIN

திருப்பூர் மாவட்டம்,  காங்கயம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
  திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே பாப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (32). இவர் கும்பகோணத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் தனது பாட்டி நாச்சம்மாளை (70)  அவரது ஊரான காங்கயம் அருகேயுள்ள சேமலைக்கவுண்டன்வலசில் கொண்டு சென்று விடுவதற்காக  வீட்டில் இருந்து காரில்  திங்கள்கிழமை புறப்பட்டார்.  
அவர்களுடன் உறவினர் சதீஷ் (35)  என்பவரும் சென்றுள்ளார். காங்கயம் அருகே சம்பந்தபாளையம் பகுதியில் வந்தபோது,  எதிரே வந்த லாரி, கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த மூவரும் படுகாயமடைந்தனர்.  உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 
ஆனால் வழியிலேயே நாச்சம்மாள் உயிரிழந்தார். சிவகுமார், சதீஷ் ஆகியோர் காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.  இதில் ஈரோடு செல்லும் வழியிலேயே சிவகுமார் உயிரிழந்தார். 
சதீஷ் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஊதியூர் போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT