10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இலவசமாக பார்க்க ஏற்பாடு
உடுமலையில் புதன்கிழமை வெளியாக உள்ள 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இலவசமாகப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உடுமலையில் புதன்கிழமை வெளியாக உள்ள 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இலவசமாகப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நூலகர் வீ.கணேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாக உள்ளது. உடுமலை உழவர் சந்தை எதிர்ப்புறம் உள்ள இரண்டாம் கிளை நூலகத்தில் தேர்வு முடிவுகளை இலவசமாகப் பார்க்கவும், அதை நகல் எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.