திருப்பூர்

விபத்தில் பள்ளி மாணவி சாவு

DIN

பல்லடம், பனப்பாளையத்தில் இருசக்கர வாகனமும், லாரியும் மோதிக்கொண்டதில் கரடிவாவி பள்ளி மாணவி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
 கரடிவாவியைச் சேர்ந்த தம்பதி சரவணக்குமார், சாரதாமணி. இவர்களது மகள்கள் நளினி (13), தாமரைபரணி (9), கீதாஞ்சலி (7). இவர்கள் மூவரும் கரடிவாவி எஸ்.எல்.என்.எம். மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில்,  கரைப்புதூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக அங்குள்ள தங்களது தாத்தா ராமசாமி வீட்டிற்கு இந்த 3 சிறுமிகளும் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர். இதில், கீதாஞ்சலி திங்கள்கிழமை கரடிவாவிக்கு திரும்பி விட்டார். 
மற்ற இருவரையும் ராமசாமி தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை கரடிவாவிக்கு அழைத்துச் செல்லும் வழியில் பனப்பாளையம் அருகே இருசக்கர வாகனமும், அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரியும் மோதிக்கொண்டன.
இவ்விபத்தில் ராமசாமி, தாமரைபரணி, நளினி ஆகிய மூவரும் கீழே விழுந்தனர். இதில்,  நளினியின் உடல் லாரியில் சிக்கி தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த  ராமசாமி, தாமரைபரணி ஆகிய இருவரும் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இது பற்றி பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT