திருப்பூர்

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: காங்கயம் ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

DIN

திருப்பூரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் காங்கயம், ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையால் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில், காங்கயம் ஸ்ரீராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி மாணவர்கள் குழுப் போட்டிகளில்,  கூடைப்பந்துப் போட்டியில் 17 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் முதலிடமும், 14 வயதுக்கு உள்பட்ட மாணவிகள் பிரிவில் 2ஆம் இடமும் பெற்றனர்.
மேலும், 14 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் பிரிவில் கோ-கோ போட்டியில் முதலிடம் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.  
இப்போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலமகா கூடைப்பந்துப் போட்டியில் 17 வயது மாணவிகள் பிரிவில் மண்டல அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களுக்குப் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் க.மணிவேல், தி.சதீஷ் ஆகியோரையும் பள்ளியின் அறக்கட்டனை அறங்காவலர் குழு உறுப்பினர் விசாலாட்சி வைத்தீஸ்வரன், பள்ளி முதல்வர் மு.ப.பழனிவேலு, ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT