தாராபுரத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மின் வாரிய மேற்பார்வையாளர் தமிழ்சேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். விவசாயிகள் சார்பில் தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்க வேண்டும், தாராபுரம் பகுதியில் பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்களை உடனடியாக மாற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.