திருப்பூர்

மனைகளை  வரன்முறைப்படுத்தும் முகாம்: காங்கயம் நகராட்சியில்  நாளை நடக்கிறது

DIN

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தும் முகாம் காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப். 20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் தேவிகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அமையும் அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்னர் கிரயம் செய்த மனைகளை இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள விண்ணப்பங்களுக்கும், இதுவரை விண்ணப்பிக்காத தனி மனை உரிமையாளர்களும் விண்ணப்பித்து பயன்பெறும் வகையில், காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை (செப். 20) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதியற்ற, விற்கப்பட்ட தனி மனைகளை வரன்முறைப்படுத்தும் முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள், செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் விபரங்கள் பெற்றுக் கொள்ளலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT