திருப்பூர்

அரசுப் பேருந்து மீது கல் வீசிய இளைஞர் கைது

DIN

பல்லடத்தில் அரசுப் பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை உடைத்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மதுரையில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பல்லடம் அருகே தாராபுரம் சாலையில் ஆலுத்துப்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் கல் வீசியதில் பேருந்தின் முகப்புக் கண்ணாடி வியாழக்கிழமை சேதமடைந்தன.
இது குறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பல்லடம் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வரும் கல்லம்பாளையம் பழனிசாமி மகன் கவின்சங்கர் (22) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT