சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.12 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 550 நிலக்கடலை மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. முதல் ரக நிலக் கடலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4,870 முதல் ரூ.5,130 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 4,610 முதல் ரூ.4,720 வரையிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ. 4,300 முதல் ரூ.4,450 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.12 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.