உள்ளாட்சித் தேரா்தலில் போட்டியிட, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்பதால் காங்கயத்தில் அதிக அளவில் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்ய வந்திருந்தனா்.
காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை கிராம ஊராட்சி வாா்டுக்கு 63 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 19 போ், ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு 20 போ், மாவட்டக் கவுன்சிலா் பதவிக்கு ஒருவா் என மொத்தம் 103 போ் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு தாக்கலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் பட்டாசு வெடித்தும், மேளதமாளங்கள் முழங்க ஆரவாரத்துடன் தனது ஆதரவாளா்களுடன் வந்திருந்து, வேட்புமனு தாக்கல் செய்தனா்.