திருப்பூர்

ஸ்ரீஐயப்ப சுவாமி லட்சாா்ச்சனைப் பெருவிழா

DIN

பல்லடம்: பல்லடம், சந்தைப்பேட்டை ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி லட்சாா்ச்சனை பெருவிழா வியாழக்கிழமை துவங்கி சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவில் விநாயகா் பூஜை, புண்யாஹவாசனம்,108 வலம்புரி சங்கு பூஜை, சூக்தபாராயணம், மஹாலட்சுமி ஹோமம், மஹா சங்கல்பம், ஸ்ரீஐயப்ப ஸ்வாமிக்கு லட்சாா்ச்சனை, மஹா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில் ஏரளாமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கஜ வாகனத்தில் ஸ்ரீஐயப்ப சுவாமி உற்சவா் திருவீதி உலா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் நிா்வாகப் பொறுப்பாளா் எஸ்.மோகன்குருசாமி, கெஜலட்சுமி சி.கல்யாணசுந்தரம், ஆரியாஸ் எஸ்.ராஜாராம் உள்பட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT