திருப்பூர்

சாலை விபத்தில் இளைஞர் சாவு

DIN

வெள்ளக்கோவில் அருகே புதுப்பையில் நடந்த சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 
மூலனூர் சாலையில் உள்ள சுப்பிரமணியக்கவுண்டன்வலசைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் எஸ்.கனகராஜ் (27).
இவர் மோட்டார் சைக்கிளில் புதுப்பை சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வெள்ளக்கோவில் சாலை தங்கமேடு அருகே எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
இதில் படுகாயம் அடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT