திருப்பூர்

சூதாடிய 47 பேர் கைது: ரூ.1.75 லட்சம் பறிமுதல்

DIN

திருப்பூரில் பணம் வைத்து சூதாடியதாக 47 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.75 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். 
திருப்பூர் வீரபாண்டி காவல் எல்லைக்கு உள்பட்ட கல்லாங்காடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு சனிக்கிழமை ரகசியத் தகவல் கிடத்தது. இதன்படி அங்கு சென்ற காவல் துறையினர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1.75 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT