திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் 3 பேர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
வெள்ளக்கோவில் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குருக்கத்தி முன்புறம் உள்ளது ஒத்தக்கடை. இதனருகே ஒரு அரசுப் பேருந்தும், காரும் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வெள்ளக்கோவில் போலீஸார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து உடனடியாகத் தகவல் தெரியவில்லை.