திருப்பூர்

நூலக வாசகர் வட்ட கூட்டம்

DIN

உடுமலையை அடுத்துள்ள மலையாண்டிபட்டிணம் ஊர்ப் புற நூலகத்தில் வாசகர் வட்ட கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தலைவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான தங்கவேலு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவராஜ் முன்னிலை வகித்தார். நூலகத்தில் வாசகர்கள் பயன்பாட்டுக்கு இருக்கைகள் நன்கொடையாகப் பெற வேண்டும். 
கடந்த கல்வி ஆண்டில் பள்ளி அளவில் முதன்மை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்க வேண்டும். தமிழ் பாடத்தில் சிறப்பிடம்  பெற்றவர்களுக்கும் மற்றும் மலையாண்டிபட்டிணம் நடு நிலைப் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கும் பரிசுகள் வழங்க வேண்டும். நூலகத்தை அதிகம் பயன்படுத்திய வாசகருக்கு நூலக ஆர்வலர் விருது ஜூலை 15ஆம் தேதி வழங்குவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாசகர் வட்ட உறுப்பினர்கள் செல்வம், தண்டபாணி, நவநீதன், முத்துச்சாமி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT