திருப்பூர்

மது போதையில் தகராறு: கூலித் தொழிலாளி கொலை

DIN

பல்லடத்தில் மது போதையில் ஏற்பட்ட  தகராறில் இரும்புக் கம்பியால் தாக்கி கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.  
பல்லடம், வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனி மகன் ராமராஜ் (45). சுப்பன் மகன் சின்னராஜ் (50). இருவரும் கூலித் தொழிலாளிகள்.  
இந்நிலையில்,  இவர்கள் இருவரும் வடுகபாளையம் பகுதியில் உள்ள கோயிலின் முன்பு அமர்ந்து மார்ச் 1ஆம் தேதி மது அருந்தியுள்ளனர்.  அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சின்னராஜ் இரும்புக் கம்பியால் ராமராஜை தாக்கியுள்ளார். 
இதில் பலத்த காயமடைந்த ராமராஜை அப்பகுதியினர் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பல்லடம் போலீஸார் சின்னராஜை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

SCROLL FOR NEXT