திருப்பூர்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

DIN

வெள்ளக்கோவில் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன. 
இங்குள்ள சோழீஸ்வர சுவாமி கோயில், முத்தூர் ஈஸ்வரன் கோயில், மயில்ரங்கம், லக்கமநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், கண்ணபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள ஈஸ்வரன் கோயில்களில் பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இக்கோயில்களில் உள்ள நந்தி எம்பெருமானுக்கு விசேஷ அலங்கார, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. 
ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் இதில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அந்தந்தப் பகுதி பிரதோஷ வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT