திருப்பூர்

வெள்ளக்கோவில் - திருமங்கலத்தில்  மே 19இல் மறு வாக்குப் பதிவு

DIN

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளக்கோவில் திருமங்கலம் வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு மே 19 இல் நடைபெறுகிறது.
 இங்கு கடந்த மாதம் நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, திருமங்கலம் வாக்குச் சாவடி எண் 248 இல் பதிவான வாக்குகளுக்கும், வாக்குப் பதிவு இயந்திரத்தில் காட்டிய எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தது. வாக்குப் பதிவுக்கு முன் நடந்த மாதிரி வாக்குப் பதிவை அழிக்காமல் விட்டதால் இந்தக் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இதுகுறித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது திருமங்கலம் வாக்குச் சாவடியில் மட்டும் மே 19 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 7 வரை மறு வாக்குப் பதிவு நடைபெறும் 
என காங்கயம் வட்டாட்சியர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT