திருப்பூர்

வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தைக் கண்டித்து திருப்பூரில்

DIN

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தைக் கண்டித்து திருப்பூரில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் வி.கே. தஹிலராமாணீ. இவர் மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT