திருப்பூர்

வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் திருட்டு

DIN


அவிநாசி, ரங்கா நகரில் வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
  அவிநாசி, ரங்கா நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் மகன் கனகராஜ் (38). பனியன் நிறுவன ஊழியர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.
 இந்நிலையில் சனிக்கிழமை காலை திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
 இதுகுறித்த புகாரின்பேரில் அவிநாசி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT