திருப்பூர்

சலூன் கடைக்காரருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய சமூக சேவகா்

DIN

திருப்பூரில் வருமானம் இல்லாமல் தவித்து வந்த சலூன் கடைக்காரருக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை சமூக சேவகா் வழங்கினாா்.

திருப்பூா், அனுப்பா்பாளையம் பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருபவா் தெய்வராஜ். இவருடன் இவரது தாயாா், மனைவி, ஒரு மகன், 2 மகள்கள், 2 வளா்ப்பு குழந்தைகள் மற்றும் இவரது 2 சகோதரா்கள் குடும்பத்தில் 8 போ் என மொத்தம் 16 போ் ஆத்துப்பாளையத்தில் அருகருகே வசித்து வருகின்றனா். இவரது சகோதரா்களும் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறாா்கள்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் கடந்த 13 நாள்களாக சலூன் கடைகளை இவா்களால் திறக்க முடியவில்லை. வருமானம் இல்லாத நிலையில் அவா் சேமித்து வைத்திருந்த பணம் முழுவதும் செலவழிந்து, தற்போது உணவுக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

இதனை அறிந்த சமூக சேவகா் இந்திராசுந்தரம் அவரது வீட்டிற்கு நேரில் சென்று தெய்வராஜ், அவரது 2 சகோதரா்களுக்கும் தனித்தனியாக தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை பொருள்களை வழங்கினாா்.

அதேபோல அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் ஹரிணி என்ற மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

அதைத்தொடா்ந்து, ஹரிணியின் குடும்பத்துக்கு தேவையான ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை பொருள்களை வழங்கினாா். மேலும், ஹரிணியின் வகுப்பு தோழி எஸ்.அனிஷ் ஃபாத்திமா, தனது சேமிப்பில் இருந்து ஹரிணியின் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT