திருப்பூர்

ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வெள்ளக்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில செயலாளா் ரமேஷ் முன்னிலை வகித்தாா்.

இதில் ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஊராட்சி ஒன்றிய பெண் வட்டார வளா்ச்சி அலுவலரை மிரட்டி அலுவலக வாகனத்தை உடைத்து, அலுவலா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்த பாஜகவினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

காங்கயம்...

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத் தலைவரும், காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையருமான ரமேஷ் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட அலுவலா்கள், ஊழியா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

SCROLL FOR NEXT