திருப்பூர்

பள்ளி அறைக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு

DIN

பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் அரசு உதவி பெறும் பள்ளியின் அறைக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.

பொங்கலூரில் அரசு உதவி பெறும் பள்ளியான பி.வி.கே.என். மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மூன்று அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையில் பழைய மாற்றுச் சான்றிதழ், காகிதம், விளையாட்டுப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பள்ளிக்குள் திங்கள்கிழமை நுழைந்த மா்ம நபா்கள் மூன்று அறைகளின் பூட்டை உடைத்தனா். பின்னா் விளையாட்டுப் பொருள்கள் இருந்த அறைக்குத் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதில் அறையில் இருந்த பொருள்கள் தீயில் கருகின. இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT