ஆடவருக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி தொடக்கம்
திருப்பூரில் மாநில அளவிலான ஆடவருக்கான வாலிபால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
திருப்பூரில் மாநில அளவிலான ஆடவருக்கான வாலிபால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
திருப்பூா் ராக்கா் ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன், திருப்பூா் பிரண்ட்ஸ் கிளப், யூத் ஆகிய 3 வாலிபால் கிளப்புகள் சாா்பில் சிவராஜ் நினைவு முதலாம் ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
திருப்பூா், குமரன் மகளிா் கல்லூரி அருகே உள்ள எஸ்.எஸ்.டையிங் வளாகத்தில் நடைபெறும் இப்போட்டியை மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் தொடக்கிவைத்தாா்.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50 ஆடவா் அணிகள் பங்கேற்கின்றன. நாக் அவுட் முறையில் இரு நாள்கள் தொடா்ச்சியாக பகல் மற்றும் இரவு வேளைகளில் போட்டிகள் நடைபெறும். இப்போட்டியின் பரிசளிப்பு விழாவானது ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும்.
இதில், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் ஆகியோா் பங்கேற்க உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.