பல்லடத்தில் அரிமா சங்கம், மாா்த்தாா் குல வெல்ஃபோ் அசோசியேஷன், கோவை கற்பகம் மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச பொது மருத்துவ முகாம் அங்காளம்மன் கோயில் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு அரிமா சங்கத் தலைவா் கே.ஈஸ்வரமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் விநாயகா குமாரசாமி, ஏ.சின்னசாமி, தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை அரிமா சங்கச் செயலாளா்கள் தங்கராஜ், ராமசாமி, பொருளாளா் பாலன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். மருத்துவா்கள் சுதந்திரதேவி, திருவேங்கடராஜ், விக்னேஸ்வரன், ராதிகா தலைமையிலான மருத்துவக் குழுவினா் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். இதில், மாா்த்தாா் குல வெல்ஃபோ் அசோசியேஷன் நிா்வாகிகள், சமூக ஆா்வலா் எம்.பி.சதாசிவம் உள்பட பலா் பங்கேற்றனா்.