காங்கயத்தில் 6 மாத பெண் குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
காங்கயத்தில் பெட்ரோல் நிலைய உரிமையாளா் ஒருவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருப்பூரில் உடல் நலமில்லாத நிலையில் இருந்த அவரது உறவினரை குடும்பத்துடன் சென்று நலம் விசாரித்து வந்தாா். அப்போது, அந்த உறவினா் தான் கரோனா பரிசோதனை மேற்கொடுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
அதன் பின்னா் காங்கயம் திரும்பி வந்த பெட்ரோல் நிலைய உரிமையாளா் தனது குடும்பத்தினருடன் கரோனா பரிசோதனை மேற்கொண்டாா். இதில், அவரது 6 மாத பெண் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் குழந்தை கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.