அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி சாவு
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில் - கரூா் சாலையில் உள்ள சேனாபதிபாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பழனிசாமி (42). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
இந்நிலையில் முத்தூா் - கொடுமுடி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ஞாயிற்றுக்கிழமை அளவுக்கு அதிகமாக பழனிசாமி மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரம் மயங்கிக் கிடந்த அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.