முகப்பு
திருப்பூர்

அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி சாவு

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் - கரூா் சாலையில் உள்ள சேனாபதிபாளையத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பழனிசாமி (42). கூலி தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.

இந்நிலையில் முத்தூா் - கொடுமுடி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ஞாயிற்றுக்கிழமை அளவுக்கு அதிகமாக பழனிசாமி மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரம் மயங்கிக் கிடந்த அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.