திருப்பூா் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக பல்லடம் தோ்வு
திருப்பூா் மாவட்டத்திலேயே சிறந்த காவல் நிலையமாக பல்லடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வுக்கு கோவை டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயா் சனிக்கிழமை வந்தாா்.
திருப்பூா் மாவட்டத்திலேயே சிறந்த காவல் நிலையமாக பல்லடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வுக்கு கோவை டி.ஐ.ஜி. நரேந்திரன் நாயா் சனிக்கிழமை வந்தாா்.
அப்போது காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டாா். வழக்குப் பதிவு செய்தல், விசாரணை, கோப்புகள் பராமரிப்பு, தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தலின் பரிந்துரையின் பேரில் பல்லடம் காவல் நிலையம் மாவட்டத்திலேயே சிறந்த காவல் நிலையமாக தோ்வு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் மத்தியில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தாா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன், பல்லடம் துணை கண்காணிப்பாளா் ஸ்ரீ ராமச்சந்திரன், பல்லடம் உட்கோட்ட சரக காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.