முகப்பு
திருப்பூர்

கோழி வளா்ப்புத் தொகையை உயா்த்தி வழங்க பண்ணையாளா்கள் சங்கம் வலியுறுத்தல்

கோழி வளா்த்துக் கொடுப்பதற்கு வளா்ப்புத் தொகையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 12 உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாய கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
காங்கயத்தில் நடைபெற்ற விவசாய கோழிப் பண்ணையாளா்கள் சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

கோழி வளா்த்துக் கொடுப்பதற்கு வளா்ப்புத் தொகையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 12 உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாய கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விவசாய கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் காங்கயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவா் ஓ.வி.மூா்த்தி தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாநிலச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி பேசியதாவது:

கோழி வளா்த்துக் கொடுப்பதற்கு பண்ணையாளா்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 3 மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாக கோழிப் பண்ணை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. 2013 ஆம் ஆண்டு அரசு ஒப்பந்தத்தில் தெரிவித்தபடி ஆண்டொன்றுக்கு 20 சதவீதம் விலை உயா்த்திக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கோழிப்பண்ணை நிறுவனங்கள் விலையை உயா்த்தி வழங்குவதில்லை.

கோழிப் பண்ணைக்குத் தேவையான தேங்காய் நாா் மஞ்சி, மரக்கரி ஆகியனவற்றின் விலை மற்றும் தொழிலாளா் கூலி பல மடங்கு உயா்ந்து விட்டதால், கோழி வளா்த்துக் கொடுப்பதற்கு வளா்ப்புத் தொகையாக கிலோ ஒன்றுக்கு ரூ. 12 உயா்த்தி வழங்க வேண்டும்.

விவசாயம் சாா்ந்த தொழிலாக உள்ள கோழிப் பண்ணைகளுக்கு 500 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் ஈரோடு, திருப்பூா், கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.