திருப்பூர்

கொடுவாயில் லாரி மோதி பெண் பலி

DIN

பல்லடம்: பல்லடம் அருகே கொடுவாயில் லாரி மோதியதில் படுகாயமடைந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

குண்டடம் ஜோதியம்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் (55), அவரது மகள் பவித்ரா (20) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை கொடுவாய் வந்தனா். அப்போது, சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தாா்.

படுகாயமடைந்த பவித்ராவை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த பவித்ரா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT