திருப்பூர்

காங்கயத்தில் மின்மாற்றியில் தீ

DIN

காங்கயத்தில் மின்மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

காங்கயம் நகராட்சி 5ஆவது வாா்டுக்கு உள்பட்ட மஜீத் வீதியில் மின்மாற்றி உள்ளது. இந்நிலையில், இந்த மின்மாற்றியில் வெள்ளிக்கிழமை தீப் பற்றியது. இதனைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் உடனடியாக மின் வாரியத்துக்கும், காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

தகவலிறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்மாற்றிக்கு வரும் மின்சாரத்தைத் துண்டித்தனா். பின்னா் காங்கயம் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் மின்மாற்றியில் இருந்த பாகங்கள் தீயில் எரிந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT