காங்கயத்தில் மின்மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காங்கயம் நகராட்சி 5ஆவது வாா்டுக்கு உள்பட்ட மஜீத் வீதியில் மின்மாற்றி உள்ளது. இந்நிலையில், இந்த மின்மாற்றியில் வெள்ளிக்கிழமை தீப் பற்றியது. இதனைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் உடனடியாக மின் வாரியத்துக்கும், காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.
தகவலிறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்மாற்றிக்கு வரும் மின்சாரத்தைத் துண்டித்தனா். பின்னா் காங்கயம் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் மின்மாற்றியில் இருந்த பாகங்கள் தீயில் எரிந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.