இந்திய விமானப் படை ஆள் சோ்ப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்க தகுதியான ஆண்கள் சனிக்கிழமைக்குள் (நவம்பா் 28) ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய விமானப் படையில் ஆள் சோ்ப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி (தஹப்ப்ஹ் ற்ங்ள்ற்) டெஸ்ட் புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் டிசம்பா் 10 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பங்கேற்க தகுதியான ஆண்கள் 17 வயதுக்கு குறையாமலும் 21 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், 12ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், டிப்ளமோ முடித்தவா்கள், கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம். இந்தப் பேரணியில் பங்கேற்க வெள்ளிக்கிழமைக்குள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.