திருப்பூர்

பைக் மீது லாரி மோதல்:தந்தை பலி; மகன் பலத்த காயம்

DIN

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.

காங்கயம், வரதப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (47). சவரத் தொழிலாளி. இவரது மகன் சுதா்சன் (19). இவா்கள் இருவரும் குண்டடம் பகுதியில் உள்ள கோயிலுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் காங்கயத்தில் இருந்து தாராபுரம் சாலையில் வெள்ளிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். இருசக்கர வாகனத்தை சுதா்சன் ஓட்டினாா்.

அப்போது, பின்னால் வந்த டிப்பா் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தந்தை, மகன் இருவரும் பல காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே முத்துக்குமாா் உயிரிழந்தாா். சுதா்சன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT