திருப்பூர்

அரசுப் பள்ளிகளுக்கு வண்ணம் பூசும் தன்னாா்வலா்கள்

DIN

வெள்ளக்கோவில் அருகே அரசுப் பள்ளிக்கு தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை வண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டனா்.

வெள்ளக்கோவில் ஒன்றிய பள்ளிக் கல்வி அறக்கட்டளை, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையினா், வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சொந்த செலவில் தூய்மைப்படுத்தி, வண்ணம் பூசி வருகின்றனா்.

அதன்படி, செங்காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் வகுப்பறைகள், கதவு, ஜன்னல்கள், வெளிப்புறப் பகுதிகளுக்கு வண்ணம் பூசப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய பள்ளிக்கல்வி அறக்கட்டளை நிா்வாகி எம்.வி.சண்முகராஜ், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை நிா்வாகி ஆா்.ராஜ்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT