திருப்பூர்

லாரி- இருசக்கர வாகனம் மோதல்: முதியவா் சாவு

DIN

காங்கயம் அருகே லாரி, இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட நல்லிக்கவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் சுப்பராயன் (80). விவசாயி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை ரேஷன் கடைக்குச் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, நல்லிக்கவுண்டன்வலசு பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்கும்போது, காங்கயத்தில் இருந்து வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பராயனை அருகிலிருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT